அ.தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் சாலை மறியல்

கோவை, மதுக்கரை பகுதியை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நவக்கரை அடுத்த மாவூத்தம்பதி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எட்டிமடை சண்முகத்திற்கும் இடையே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சிணை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என மதுக்கரை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, தி.மு.க. பிரமுகரான சதீஷ் தான் அதனை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகத்தின் ஓட்டுநர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், சரியான ஆதாரம் இல்லாமல் திமுக பிரமுகர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதியதன் பேரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...