அ.தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் சாலை மறியல்

கோவை, மதுக்கரை பகுதியை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நவக்கரை அடுத்த மாவூத்தம்பதி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எட்டிமடை சண்முகத்திற்கும் இடையே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சிணை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என மதுக்கரை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, தி.மு.க. பிரமுகரான சதீஷ் தான் அதனை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகத்தின் ஓட்டுநர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், சரியான ஆதாரம் இல்லாமல் திமுக பிரமுகர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதியதன் பேரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...