கோவையில் வடகிழக்கு பருவ மழை வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும்

கோவையில் வரும் சனிக்கிழமை வரை மழை நீடிக்கும் என கோவை வேளாண் பல்கலைக் கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை இன்று  துவங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான மழை பெய்யத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை வரை பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வானிலை ஆய்வு மையத்தின் வானவியல் துறைத் தலைவர் எஸ்.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

"தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு கோவையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு கோவையில் பருவ மழைக்காலத்தில் 347 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 135 மில்லிமீட்டர் மழையே பெய்தது. இந்த வருடம் 327 முதல் 347 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். விருதுநகர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையே பெய்யும்". என்றார்.

மேலும், இந்த பருவ மழையின் போது பெறப்படும் நீரினை வீணடிக்காமல் தேக்கி வைத்து விவசாயிகள் பயனடைய வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதிகளில் வடிகால் குழாய்களை சீரமைத்து வைக்க வேண்டும் எஸ்.பன்னீர் செல்வம் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...