பராமரிப்பு பணிகளுக்கு பிறகு பழங்கால என்ஜின் உதகை ரயில் நிலையத்தில் பொருத்தம்

உதகை ரயில் நிலையத்தில் சுமார் 96 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த பழங்கால ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிகளுக்கு மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டது.

ஆங்கிலேயர் காலமான 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட x 37386 என்ற எண் கொண்ட ரயில் என்ஜின், 1921ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டு வந்தது.  கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த என்ஜினை, எண்ணெய் மூலம் இயக்கும் தன்மைக்கு மாற்றுவதற்காக திருச்சியில் உள்ள கோல்டன் ராக் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள என்ஜினை, மக்களின் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில் முடிவு செய்தது. அதன்படி, அங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், உதகை ரயில்நிலையத்தில் மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல, 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.  

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...