பெங்களூரூ விமான நிலையத்தின் ஏர்-கார்கோ முனையம் கோவையில் தொடக்கம்

பெங்களூரூ சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையம் கோவை மாவட்டம் இருகூரில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள கண்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் ஒருங்கிணைந்த கண்டெய்னர் டெப்போவில் இருந்து பெங்களூரூ சர்வதேச விமான நிலையம், தனது சரக்கு முனையத்தை கடந்த 5-ம் தேதி சுங்க அனுமதி பெற்ற சரக்கு போக்குவரத்தை தொடங்கியுள்ளது. 

இதன்மூலம், கோவை ஏற்றுமதியாளர்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் தங்கள் சரக்குகளை கோவை, இருகூரிலேயே சுங்கத்தீர்வை செய்து கொள்ளலாம். சுங்கத்தீர்வை செய்யும் சரக்குகள் உடனுக்குடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு சுங்க அனுமதி பெற்ற லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

அங்கிருந்து புறப்படும் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்கின்றனர். இதுவரை இந்த வசதியை பயன்படுத்தி கனடா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின்  போன்ற நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கோவையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் சரக்குகளை கோவையில் இருந்தே ஏற்றுமதி செய்வதோடு, பொருளாதார ரீதியாகவும் பயன்பெறுவதாக முனையத்தின் அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...