உலக அளவில் வன்முறையிலிருந்து விடுபட்டு, தலைமை பண்பை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்க்கும் சமந்தா கல்வித் திட்டப் புத்தகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து குழந்தைகளின் பாலினத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும், இனத்துக்கும் ஏற்ப பணியாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே சமந்தா திட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மேம்பாடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
அதற்கான கல்வித் திட்டங்களை உருவாக்கி, மதிப்புகளைக் கொண்டிருப்பதுடன், குந்தைகளின் தன்மையை சமந்தா மேம்படுத்தி வருகிறது. வன்முறைக்கு எதிரான, குறிப்பாக பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஒருங்கிணைந்த இந்த கல்விதிட்டத்தில், 3 முதல் 4 வயது முதல் துவங்கும் முதல் நிலையில் 140 பாடத்திட்டங்கள் இருக்கும் இரண்டாவது நிலையில் 4 முதல் 5 அல்லது 5 முதல் 6 வயதில் நிறைவு பெறும். அடுத்தடுத்த புதிய பாடங்கள் பள்ளி கல்வி நிறைவு பெறும் வயதில் 17 முதல் 18 ல் நிறைவு பெறும். உலக அளவில் 20 நிபுணர்கள் கொண்ட குழு, இதை வடிமைத்து மேம்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், வழிமுறைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் இலங்கை, போட்ஸ்வானா, அர்ஜெண்டினா, கென்யா போன்ற நாடுகளில் முன்மாதிரி அடிப்படையில் கடந்த ஜனவரி 2017 முதல் துவக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2017 முதல் கனடா, இந்தோனேஷியா, மற்றும் நைஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துாதர அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு கொரியா சியோல் நகரில் நடந்த உலக கல்வி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் இது தொடர்பாக அங்கீகாரம் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தற்போது கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜய்கார்த்திகேயன் மூலம் சமந்தா தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணசாமி புத்தகங்களை பெற்றுக்கொண்டார். தலைமை கல்வி அதிகாரி உமா, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை வியாபார அலுவலர் ஸ்வாதி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அனைத்து குழந்தைகளின் பாலினத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும், இனத்துக்கும் ஏற்ப பணியாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே சமந்தா திட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மேம்பாடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
அதற்கான கல்வித் திட்டங்களை உருவாக்கி, மதிப்புகளைக் கொண்டிருப்பதுடன், குந்தைகளின் தன்மையை சமந்தா மேம்படுத்தி வருகிறது. வன்முறைக்கு எதிரான, குறிப்பாக பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஒருங்கிணைந்த இந்த கல்விதிட்டத்தில், 3 முதல் 4 வயது முதல் துவங்கும் முதல் நிலையில் 140 பாடத்திட்டங்கள் இருக்கும் இரண்டாவது நிலையில் 4 முதல் 5 அல்லது 5 முதல் 6 வயதில் நிறைவு பெறும். அடுத்தடுத்த புதிய பாடங்கள் பள்ளி கல்வி நிறைவு பெறும் வயதில் 17 முதல் 18 ல் நிறைவு பெறும். உலக அளவில் 20 நிபுணர்கள் கொண்ட குழு, இதை வடிமைத்து மேம்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், வழிமுறைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் இலங்கை, போட்ஸ்வானா, அர்ஜெண்டினா, கென்யா போன்ற நாடுகளில் முன்மாதிரி அடிப்படையில் கடந்த ஜனவரி 2017 முதல் துவக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2017 முதல் கனடா, இந்தோனேஷியா, மற்றும் நைஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துாதர அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு கொரியா சியோல் நகரில் நடந்த உலக கல்வி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் இது தொடர்பாக அங்கீகாரம் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தற்போது கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜய்கார்த்திகேயன் மூலம் சமந்தா தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணசாமி புத்தகங்களை பெற்றுக்கொண்டார். தலைமை கல்வி அதிகாரி உமா, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை வியாபார அலுவலர் ஸ்வாதி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
