குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இமயம் முதல் குமரி வரை சைக்கிள் பிரச்சாரம்

தூய்மையான இந்தியா, குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி வாலிபர் ஒருவர் இமயம் முதல் குமரி வரை சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.



கோவையை சேர்ந்த தண்டபாணி வேணுகோபால் (27) என்பவர் குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கடந்த காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி, கடந்த அக்டோபர் 2-ம் தேதி காஷ்மீரில் இருந்து தனது சைக்கிள் பேரணியை தொடங்கினார். அவருடன் நண்பர் சதீஷ்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.



13 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் விழிப்புணர்வு பிரச்சாரம் , கன்னியாகுமரியில் கடந்த 15-ம் தேதி நிறைவடைந்தது. 

சுமார் 4,000 கி.மீ. வரையிலான இந்த சைக்கிள் பயணத்தின் போது, மோதல்கள், கல்வீசித் தாக்குதல், கண்ணீர்புகைக் குண்டு மற்றும் பல்வேறு காலநிலை மாற்றங்கள் போன்றவற்றை தண்டபாணி வேணுகோபால் கடந்து வந்துள்ளார். 



கின்னஸ் சாதனைக்காக மட்டுமில்லாமல், குழந்தைகள் வன்கொடுமை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த சைக்கிள் பிரச்சாரம் பல்வேறு மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு, ரோட்டரி கிளப், பைவே பிரைவேட் லிமிடேட், பார் அசோசியேஷன் ஆப் கோவை மற்றும் ஹுளிக்கல் போன்றவைகள் நிதி ஆதரவு அளித்தனர்.



தனது சாகசப் பயணம் குறித்து சிம்ப்ளிசிட்டிக்கு தண்டபாணி வேணுகோபால் கூறுகையில், இந்தப் பயணம் என்பது எளிதானது அல்ல. வழித்தடங்கள் மற்றும் தங்கும் இடங்கள் ஏற்கனவே, திட்டமிடப்பட்டது. பயணத்தின் போது, மழை மற்றும் மோசமான வானிலை போன்ற இடர்பாடுகளை சந்திக்க நேரிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தூரத்தை வெறும் 8 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.



இதைத் தொடர்ந்து, தண்டபாணி வேணுகோபால், நாட்டின் கிழக்குப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து மேற்குப் பகுதியான குஜராத் வரை மீண்டும் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...