பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவதூறாக பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில் மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், கட்சி அலுவலக இடத்தை திருமாவளவன் மிரட்டி வாங்கியதாக தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாகவும், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறாக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, தமிழிசை சவுந்திரராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் தனது கருத்தை திரும்ப பெறவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

அந்த புகார் மனுவில் மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், கட்சி அலுவலக இடத்தை திருமாவளவன் மிரட்டி வாங்கியதாக தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாகவும், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறாக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, தமிழிசை சவுந்திரராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் தனது கருத்தை திரும்ப பெறவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.