தாறுமாறாக பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள்: நடவடிக்கை தேவை

கோவை சுங்கம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி 5- இலக்கமிட்ட (TN 66 A 5955) தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பேருந்தை பூலுவம்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஆபிரகாம் பிலிப் (32) இயக்கி வந்தார்.

அதேநேரத்தில், சுங்கம் பகுதியில் இருந்து 5- இலக்கமிட்ட மற்றொரு தனியார் பேருந்து (TN 37 AP 7373) வந்தது. இந்த பேருந்தை அன்னூரை சேர்ந்த ஓட்டுனர் பால சுப்ரமணியன் (39) இயக்கினார். 

இந்த இரு பேருந்துகளும் ஒரே வழிப்பாதையில் பயணிப்பதால் ஓட்டுனர்களுக்கு இடையே முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டது.



இதனால், ஒருவரை ஒருவர் முந்த போட்டி போட்டுக்கொண்டு தாறுமாறாக பேருந்தை இயக்கினர்.

பேருந்து ஒலம்பஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது இரு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து விபத்து ஏற்பட்டது.



இதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. வார இறுதி நாள் என்பதால் பேருந்து நிறுத்தத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் பேருந்து ஓட்டுனர்கள் இருவரையும் காந்திபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

வழக்கமாகவே 5 இலக்கமிட்ட பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதாகவும். அதிகாரிகள் இந்த பிரச்சனையை கண்டும் காணமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தாறுமாறாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...