தாறுமாறாக பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள்: நடவடிக்கை தேவை

கோவை சுங்கம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி 5- இலக்கமிட்ட (TN 66 A 5955) தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பேருந்தை பூலுவம்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஆபிரகாம் பிலிப் (32) இயக்கி வந்தார்.

அதேநேரத்தில், சுங்கம் பகுதியில் இருந்து 5- இலக்கமிட்ட மற்றொரு தனியார் பேருந்து (TN 37 AP 7373) வந்தது. இந்த பேருந்தை அன்னூரை சேர்ந்த ஓட்டுனர் பால சுப்ரமணியன் (39) இயக்கினார். 

இந்த இரு பேருந்துகளும் ஒரே வழிப்பாதையில் பயணிப்பதால் ஓட்டுனர்களுக்கு இடையே முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டது.



இதனால், ஒருவரை ஒருவர் முந்த போட்டி போட்டுக்கொண்டு தாறுமாறாக பேருந்தை இயக்கினர்.

பேருந்து ஒலம்பஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது இரு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து விபத்து ஏற்பட்டது.



இதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. வார இறுதி நாள் என்பதால் பேருந்து நிறுத்தத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் பேருந்து ஓட்டுனர்கள் இருவரையும் காந்திபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

வழக்கமாகவே 5 இலக்கமிட்ட பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதாகவும். அதிகாரிகள் இந்த பிரச்சனையை கண்டும் காணமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தாறுமாறாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...