கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் நிலை நுழைவாயிலில் போதிய கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் அனுமதியின்றி விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினரால் (CISF) தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் வழியனுப்ப வருபவர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பு உள்ளிட்ட பலகட்ட பாதுகாப்பு சோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில், விமான நிலையத்தின் இடது புறத்தில்அமைந்துள்ள பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய கண்காணிப்போ அல்லது அடையாளச் சரிபார்ப்போ இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நுழைவாயிலை பெரும்பாலும் விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தொழிலாளர்கள் தினசரி பணிக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாததால் வெளிநபர்களும் அதே வழியாக விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எந்தவித பாதுகாப்பு சோதனையும் இன்றி நுழையும் நபர்கள், விமான நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், விமான நிலைய நிர்வாகமும் CISF அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் பாதுகாப்பு கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பு தரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர


Newsletter

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகமும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பு,...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி - IIT பாலக்காடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும் IIT பாலக்காடும் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துண...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையில் தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. திரும...