சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு- விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பொதுப் பணித்துறை சின்னவேடப்பட்டி தடுப்பணையை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், சங்கனூர் பள்ளத்தில் இருந்து தடாகம் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. அவ்வாறு வரும் நீரினை ஏரியில் தேக்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெரும் வகையில் கடந்த 1950 ஆம் ஆண்டு சின்னவேடப்பட்டியில் தடுப்பணை கட்டப்பட்டது. 5 சட்டர்கள் கொண்ட இந்த தடுப்பணையில் மூன்று சட்டர்கள் நீரினை வெளியேற்றவும், இரண்டு சட்டர்கள் மணலை தடுத்து நிறுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.



இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி இந்த தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சின்னவேடப்பட்டி ஏரியில் நீர் வழித்தடம் அடைபட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவணம்பட்டி, அரசூர், கணபதி, நீலம்பூர், சின்னியம்பாளையம், கோவில்பாளையம் மற்றும் குரும்பப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சின்னவேடப்பட்டி நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்றும், தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி தடுப்பணையினை சீரமைக்கும் பொருட்டு பொதுப்பணித் துறை ரூ.30 லட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...