கோவையில் கடைபிடிக்கப்பட்ட காவலர் வீர வணக்க நாள் - 72 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி சீன ராணுவத்துடனான போரின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்தனர்.



அவ்வாறு போரின் போதும், கலவரங்களின் போதும் உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாக கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 21-ம் நாள் காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள காவலர்கள் காவலர் வீர வணக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த காவலர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்து 72 குண்டுகளை  விண்ணில்  முழங்கி மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலியை உரித்தாக்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் லட்சுமி, பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...