பேச்சுவார்த்தையில் உடன்பாடு- துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் நியாயமான போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனையை 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி இன்று காலை முதல் நகரை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டுக்கான முறையான போனஸ், சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஒப்பந்த தொழிலாளர் சார்பாக முறையான தினக்கூலி, வார விடுமுறை, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்குதல் மற்றும் நியாயமான போனஸ் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி, குழுக்கள் அமைத்து மூன்று வாரங்களுக்குள் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...