ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கே எனது ஆதரவு -  நடிகை ஓவியா

ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு எனது ஆதரவு என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், தனியார் அமைப்பு சார்பாக "மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017" என்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தனக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மேலும், பட வாய்ப்புகளும் கிடைப்பதாகவும் கூறினார். தற்போது, காஞ்சனா படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 



மேலும், தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக நிச்சயம் எதாவது விரைவில் செய்வேன் எனக் கூறிய ஓவியா, அரசியலை சிலர் பணம் மற்றும் புகழுக்காக பயன்படுத்துவதாகவும், புகழ் மற்றும் பணம் கொண்ட கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு தனது ஆதரவு நிச்சயம் உண்டு என தெரிவித்தார். மேலும், ரஜினி பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாததால், கமலுக்கே தனது ஆதரவு எனவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...