எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - எஸ்.ஏ.சி.ஓ.என் இயக்குநர் மறுப்பு

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு (எஸ்.ஏ.சி.ஓ.என்)  வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி, நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல, வெறும் வதந்தி என அதன் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பறவையியல் ஆராய்ச்சி மையத்திற்கு, ஆண்டுதோறும்  நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த தகவலை, எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்தின் இயக்குநர் சங்கர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எங்களது ஆராய்ச்சி மையமானது பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அவற்றிற்கு மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது. ஒருசில திட்டங்கள், மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் உள்ள முதன்மையான பறவையியல் ஆராய்ச்சி மையங்களில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையமும் ஒன்று. மொத்தம் 54.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையமானது ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு  அவர் கூறினார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...