கோவையில் இந்த தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடப்பட்டுள்ளது - தீயணைப்புத்துறை அறிவிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த தீபாவளி பண்டிகை பாதுகாப்பாகவே கொண்டாடப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் என எட்டு  தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு, 16 தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 165 பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள ஏதுவாக உக்கடம், ஒப்பணக்கார வீதி, என்.எஸ்.ஆர். ரோடு, சத்தி சாலை, காந்திபுரம் மேம்பாலம், சிங்காநல்லூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் மாவட்ட தீயணைப்புத் துறை வாகனங்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில்,  கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும், இந்த தீபாவளி பாதுகாப்பாகவே அமைந்தது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பாக, தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் சிறிய அளவிலான மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டன. பீளமேடு எல்லைக்குட்பட்ட பகுதியில் ராக்கெட் பட்டாசு, விழுந்ததில் தென்னை மட்டையால் வேயப்பட்டிருந்த பந்தலில் சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. பொள்ளாச்சி மற்றும் கோவை தெற்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் ராக்கெட் பட்டாசு, மரங்களின் மீது விழுந்ததில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர்.  பாதுகாப்பான தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...