வாலிபரை கொலை செய்த கும்பலை 8 மணி நேரத்தில் கைது செய்த துடியலூர் போலீஸார்


கோவையில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை துடியலூர் போலீஸார் 8 மணி நேரத்தில் கைது செய்தனர். 

ரத்தினபுரி, தில்லைநகரைச் சேர்ந்த சீனிவாசன் (20) என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவர், நேற்றிரவு 10 மணியளவில் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், கொலை நடந்த 8 மணி நேரத்தில், குற்றவாளிகளான ஜீனத்குமார் (30), சூர்யபிரகாஷ் (27), செந்தில்குமார் (30) ஆகிய 3 பேரை ரத்தினப்புரி பகுதியில் உள்ள நாராயணசாமி லே அவுட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சீனிவாசன் மற்றும் கொலையாளிகள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான விக்கி என்பவர் ஜீனத்குமாருடன் சண்டையிட்டு மாயமாகியுள்ளார். இதனால், விக்கி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு சீனிவாசனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

 பின்னர், ஜீனத்குமார், சூர்யபிரகாஷ் , செந்தில்குமார் ஆகியோருடன் சீனிவாசன், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள விக்கியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு விக்கி, வீட்டில் இருக்கிறாரா..? எனப் பார்த்து வருமாறு சீனிவாசனிடம் மூவரும் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், கத்தி மற்றும் கற்களை கொண்டு தாக்கி சீனிவாசனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...