தீபாவளியன்று வெளியாகுமா "மெர்சல்"...? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!!

தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், நாளை தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இன்று முதலே குவிந்து வருகிறது.



"அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டவாது படம் இது என்பதாலும், மூன்று கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி பலரின் கைபேசி அழைப்புப் பாட்டாகவும் ஒலித்து வருகிறது. 



மேலும், முழு படம் வெளிவருவதற்கு முன்பே மெர்சல் படத்தின் டீசர் பல கோடி மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதேபோல் படமும் பெரும் சாதனைப் படைக்கும்" என்றார் திரையரங்கு வாசலில் டிக்கெட்டுக்காக அலைமோதிக்கொண்டிருந்த விஷ்ணு.

இதனிடையே, கோவை நகரின் பிரதான திரையரங்குகளில் மட்டுமே வியாழக்கிழமை காட்சிகளுக்கான டிக்கெட் விநியோகிக்கப்படுவதால், நாளை இப்படம் திரைக்கு வருமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ரசிகர் நவீன் கூறியதாவது:-



"சமீபகாலமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் திரையிடுவதற்கு ஒருசில நேரத்திற்கு முன்பு தற்காலிக தடை பெற்று பின் திரைக்கு வருவது வழக்கமாகியுள்ளது. மெர்சல் திரைப்படமும் தற்போது பல சிக்கலை சந்தித்த நிலையில், நாளை வெளிவரும் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் நாளை மறுநாளுக்கான டிக்கெட் மட்டுமே திரையரங்குகளில் விநியோகிக்கப்படுகிறது. இது குறித்து திரையரங்க உரிமையாளர்களும் முறையாக பதிலளிக்க மறுக்கின்றனர்" என்று புகாரளித்தார்.

இதைப்பற்றி திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "நாளை மறுநாளுக்கான டிக்கெட்டுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டதால் தான் தற்பொழுது டிக்கெட் கொடுத்து வருகிறோம். விரைவில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் கொடுக்கப்படும். ரசிகர்கள் சந்தோஷமாக படத்தைப் பார்ப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திரையரங்க உரிமையாளர்களிடம் நிலவும் இந்த குழப்பத்தால், மெர்சல் மட்டுமின்றி நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சென்னையில் ஒரு நாள் 2, அறம், பொட்டு, மேயாத மான் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களின் வெளியீடும் பெரும் குழப்பத்தில் உள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...