பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலை- ஜிஎஸ்டி வரி உயர்வால் பாதிப்பு


பட பட பட்டாசுகளும் தித்திப்பான இனிப்புகளும் நிறைந்த தீபாவளிப் பண்டிகை நாளை (அக்டோபர் 18) உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனைக் கொண்டாட பெரும்பாலான மாவட்டங்களில் கடைவீதிகளும் சாலைகளும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. ஆனால், தீபாவளியின் சிறப்பான பட்டாசுக் கடைகளோ மக்கள் கூட்டமின்றி  வெறிச்சோடி கிடக்கின்றன.

"ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் பெருமளவு குறைந்தது. உற்பத்தி குறைந்ததால், பட்டாசு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.



எனவே, மக்கள் பட்டாசுகளை வாங்குவதைக் குறைத்துவிட்டனர். தீபாவளிக்கு முந்தைய நாளிலாவது மக்கள் பட்டாசுகளை வாங்குவார்கள் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் அவ்வப்போது மழை பெய்வதால் பட்டாசு விற்பனை மேலும் பாதிப்படைகிறது" என்றார் பட்டாசு விற்பனையாளர் முருகன்.

குறிப்பாக, பிரதான சாலைகளில் உள்ள பெரிய பட்டாசு கடைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் குழந்தைகளோடு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். மற்ற சிறிய பட்டாசு கடைகளில் பட்டாசு வாங்குவோரின் வருகை மிக அரிதாக உள்ளது.



கடந்த 15 வருடங்களாக லாலிரோட்டில் பட்டாசு விற்பனை செய்யும்  ஒருவர் கூறியதாவது:-

"பத்து வருடத்திற்கு முன் லாலிரோடு சந்திப்பு முதல் காந்தி பூங்கா வரை ஏழுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இருக்கும். மக்கள் கூட்டம் பட்டாசு கடைகளில் நிரம்பி வழியும். ஆனால், இந்த வருடம் இரண்டு கடைகள் மட்டுமே உள்ளது. அங்கும் மக்கள் கூட்டமேயில்லை. இதற்கு காரணம் மக்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தான்.

பண்டிகை நாட்களை மதுவோடும், தொலைக்காட்சியோடும், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களோடும் மட்டுமே கொண்டாடப் பழகிவிட்டோம். மேலும், உரிமம் வாங்க ஆகும் செலவு, வரிச் செலவு இவற்றோடு கடைகளில் மீதமாகும் பட்டாசுகளை பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவைப்பதற்கு ஆகும் செலவு என முதலீடு பெரிய அளவில் தேவைப்படுகிறது. இதில் பாதி கூட வருமானமாக கிடைப்பதில்லை" என்றார் வருத்தத்தோடு.

மக்களின் மனநிலையிலும், வானிலையிலும் சாதகமான மாற்றங்கள் வரும் என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர் பட்டாசு வியாபாரிகள்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...