டிச.,15-ம் தேதி ரயில்வே பணி ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

ரயில்வேத்துறையில் இருந்து பணி ஓய்வுபெற்றவர்களின் குறை தீர்ப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 15-ம் நடக்கிறது.

சேலம் கோட்ட  பழைய கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்க வளாகத்தில் வரும் டிசம்பர் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் நடத்த உள்ளது.  எனவே, ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு வரும் 31-ம் தேதிக்கு முன்னதாகவே கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம்.

இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான குறைகள். கருணை அடிப்படையிலான பணி வழங்குதல் சம்பந்தமான குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் காப்பாளர் தொடர்பான குறைகள், மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.  மேலும், ஏற்கனவே நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்ப்பு மன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு திருப்திகரமாக பதிலளிக்கப்பட்ட குறைகளும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...