வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு - வனத்துறையினர் அறிவிப்பு

வனவிலங்குகளின் நலன் கருதி வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, இன்னும் ஒருநாளே உள்ளது. இதனால், அனைவரும் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், வன எல்லைகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  சத்தம் மிகவும் குறைவான வெடிகளை பயன்படுத்தலாம் என்றும்,  வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தடாகம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி  மற்றும் காரமடை போன்ற பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் வனத்துறையினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுகளால் வனப்பகுதிக்குள் இருக்கும் விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வன எல்லையில் உள்ள கிராமத்தினரை சத்தம் குறைவான பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...