பொய்வழக்கு தொடர்ந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரி மனு

தனது பணத்தை அபகரித்துக் கொண்டு, தனது மீது பொய் வழக்கு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபாதை வியாபாரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் நடைபாதை பழவியாபாரம் செய்து வருபவர் காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி 100 அடி சாலையில் பகலில் கம்பங்கூழ் கடையும், மாலையில் இட்லி வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஸ்வரியின் இட்லி கடைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆய்வாளர் ஜெயராஜ், காவலர் கணேசன், எந்த அனுமதியுமின்றி கடை வைத்ததாகக் கூறி காந்தியை இரவு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அனுமதியின்றி கடை வைத்ததால், 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் தாயை வரவழைத்து அபராதத் தொகையான ரூ.1,200 செலுத்திவிட்டு, வியாபாரி காந்தி காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது பணத்தை அபகரித்தது மட்டுல்லாமல் பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் மோகன், பாலகன், ஜெயராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், அபகரித்த பணத்தை திரும்பப்பெறக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...