பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு- கோவையில் முடங்கிய கேரள பேருந்து சேவை

கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் காரணமாக, கோவை மாவட்டம், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேசமயம் ஒரு சில கேரள அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் திடீரென நடத்தப்படும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் விடுமுறைக்கு கேரளா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...