மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges ஆகியவற்றை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




கோவை:

மின்சாரத்துறையில் நிலையான கட்டணம் மற்றும் Demand Charges ஆகியவற்றை குறைக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நிலை மற்றும் தேவை கட்டணங்களை (Demand - Fixed Charges) 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.



மேலும், ரூப் டாப் சோலார் (Roof Top Solar) மின் உற்பத்தி திட்டத்திற்கு உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“தமிழக ஜவுளித் தொழில்துறைக்கு ஆண்டுதோறும் 110 லட்சம் பேல் பருத்தி தேவைப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் பேல் பருத்தி மட்டுமே விளைவிக்கப்படுகிறது. எனவே, பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,” என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் செங்கோட்டையன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...