கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, கோவை மாவட்டம், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேசமயம் ஒரு சில கேரள அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் திடீரென நடத்தப்படும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் விடுமுறைக்கு கேரளா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, கோவை மாவட்டம், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேசமயம் ஒரு சில கேரள அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் திடீரென நடத்தப்படும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் விடுமுறைக்கு கேரளா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.