சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கோவை மாகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.,14) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32, விளாங்குறிச்சி, ஸ்ரீ தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள 35 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, பவன் பூங்கா, பார்க் சைட் 1 மற்றும் 2 (புதிய தில்லை நகர் விரிவாக்கம்) பகுதியில் உள்ள 17.65 சென்ட் பரப்பும், வார்டு எண்.19, வீரகேரளம் ராஜூ நாயுடு லேஅவுட் பகுதியில் உள்ள 10.67 சென்ட் பரப்பும், அதே பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10.71 சென்ட் பரப்பளவிற்கான இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.28, சரவணம்பட்டி, ஸ்ரீ சக்தி கார்டன் ( பகுதி 2) பகுதியில் உள்ள 18 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 இளங்கோவன் நகர் ( பார்க் சைட்1 மற்றும் 2 ) பகுதியில் உள்ள 25 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 106.32 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து கோவை மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மீட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மாநகர நகரமைப்பு பிரிவின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...