சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கோவை மாகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.,14) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32, விளாங்குறிச்சி, ஸ்ரீ தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள 35 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, பவன் பூங்கா, பார்க் சைட் 1 மற்றும் 2 (புதிய தில்லை நகர் விரிவாக்கம்) பகுதியில் உள்ள 17.65 சென்ட் பரப்பும், வார்டு எண்.19, வீரகேரளம் ராஜூ நாயுடு லேஅவுட் பகுதியில் உள்ள 10.67 சென்ட் பரப்பும், அதே பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10.71 சென்ட் பரப்பளவிற்கான இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.28, சரவணம்பட்டி, ஸ்ரீ சக்தி கார்டன் ( பகுதி 2) பகுதியில் உள்ள 18 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 இளங்கோவன் நகர் ( பார்க் சைட்1 மற்றும் 2 ) பகுதியில் உள்ள 25 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 106.32 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து கோவை மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மீட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மாநகர நகரமைப்பு பிரிவின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...