மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.,13) நடந்தது. 

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், உத்தரவின்பேரில், துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டலம் மற்றும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்படுகின்ற டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி ஆணையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் கேட்டறிந்தார். 

அப்போது, டெங்கு தடுப்பு குழுவினர் வழக்கமாக வீடுவீடாக சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், அதிகமாக காய்ச்சல்  உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார். 

டெங்கு தடுப்பு குழுவினர் பணிகள் மேற்கொள்ளும் போது  டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தொடர்ந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். சுகாதார ஆய்வாளர்கள் தங்கள் வார்டுகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு வளாகங்கள், தனியார் வளாகங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொண்டு தேவையான இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

முக்கியமாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளின் போது கொசு உற்பத்தியாகும் இடங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...