தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தொழிலாளர்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு எஸ்டேட் தொழிலாளர்கள் 20 சதவிகித தீபாவளி போனஸ் வேண்டியும், நிர்வாகம் வழங்கிய 9.5 சதவிகித போனஸிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயம், வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு நாளை தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டது. 

மேலும், இருபது சதவிகித போனஸ் வழங்க வேண்டுமெனவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் குடும்பத்துடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...