”தீபாவளி போனஸை வீட்டுக்கு கொடுங்க, மதுபான கடைக்கு அல்ல” - ஈரநெஞ்சம் மகேந்திரன் வலியுறுத்தல்



தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், ஆண்டு முழுவதும் உழைத்த ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் போனஸ் வழங்கி மகிழ்வித்து வருகின்றன. இந்த சூழலில், குடிமகன்கள் பலர் போனஸ் பணத்தை பெற்ற கையோடு, அதனை மதுவுக்கு செலவு செய்து வருகின்றனர். 

இந்த சூழலில், போனஸ் பணத்தை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டுமே தவிர, மதுபானக்கடைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி ஈரநெஞ்சம் தன்னார்வ அமைப்பு சார்பில் 'நம் வீடு நம் பண்டிகை' என்ற பெயரில் கோவையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



இது குறித்து ஈர நெஞ்சம் அமைப்பின் நிறுவனர் மகேந்திரன் கூறியதாவது :- தீபாவளி பண்டிகை என்பது அனைவருக்கும் போனஸ் கிடைக்கும் நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் காலம். ஆனால், இன்னும் சில வீடுகளிலோ குடும்ப தலைவன் வாங்கும் போனஸ் சரியாக அவர்கள் குடும்பத்தில் போய் சேர்வதில்லை. இதற்கு காரணம் குடிப்பழக்கம். வாங்கும் சம்பளம் மற்றும் போனஸ் போன்றவற்றை வீட்டில் கொடுத்து மகிழ்ச்சிக்கு வித்திடாமல் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுத்துவிடுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நம் ஈர நெஞ்சம் அறக்கட்டளை "நம் வீடு நம் பண்டிகை" என்னும் தலைப்பில் கோவை பெரியார் நகர், சிவானந்தாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் தெருவோர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் துன்பங்கள், குழந்தைகளுக்கும் சுற்றியுள்ளோர்களுக்கும் ஏற்படும் விளைவுகள் மற்றும் குடிப்பழக்கத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது. குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் எங்கள் அமைப்பை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...