தற்கொலை செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம்

ஐதராபாத் : இந்த ஆண்டு , ஐதராபாத் நகரில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டதாக குற்றவியல் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 402 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 265 பேர் ஆண்கள். 265 பேரில் 204 பேர் தூக்கு போட்டும், 39 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். 

ஐதராபாத்தில் இந்த ஆண்டு 137 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 15 பேர் தீக்குளித்தும், 16 பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் குடும்ப பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என சரியாக கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது கடன் பிரச்னையே காரணமாக உள்ளது என்றார். 

மனநல மருத்துவர்கள் கூறுகையில், பெண்களை விட ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். சில சமயங்களில் இது தற்கொலை வரை கொண்டு சென்று விடுகிறது. பொதுவாக பெண்களே அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை. இதுவே தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது. இது போன்ற மனஅழுத்தம் கொண்ட ஆண்களை கண்டறிவது மிகவும் கடினம் என்கின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...