கோவையில் நடைபெற்ற சேலம் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

சேலத்தில் அமைக்கப்பட உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி சிறந்த ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:-

"ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது. ஆனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டிற்குள் 20 லட்சம் நிறுவனங்களை இணைக்கவும் அதிகளவில் இத்திட்டத்தில் நிறுவனங்கள் இணைய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களும் காகிதம் இல்லா அலுவலகங்களாக மாற்றப்படும்.

தொழிலாளர்களுக்காக உள்ள 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குழந்தை தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...