கோவையில் நடைபெற்ற சேலம் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

சேலத்தில் அமைக்கப்பட உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி சிறந்த ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:-

"ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது. ஆனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டிற்குள் 20 லட்சம் நிறுவனங்களை இணைக்கவும் அதிகளவில் இத்திட்டத்தில் நிறுவனங்கள் இணைய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களும் காகிதம் இல்லா அலுவலகங்களாக மாற்றப்படும்.

தொழிலாளர்களுக்காக உள்ள 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குழந்தை தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...