நீலகிரியில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெறும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டமானது மலைப்பிரதேச மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தின் பூகோள ரீதியான அமைப்பின்படியும் புவியியல் தொழில்நுட்ப துறையின் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் ஆய்வறிக்கையின்படியும் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளின் பல்வேறு இடங்களில் கட்டிடம் கட்டும் பணிகளை முறைப்படுத்த வேண்டியும், அனுமதியற்ற கட்டிடங்களை தடுக்கும் வகையிலும் மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டி பெறப்படும் விண்ணப்பங்களின் காலத்தாமதத்தை தவிர்க்கவும், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அனைவரும் இந்த இணைய தளத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதிவேற்றம் செய்து பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இணை தள முகவரி: www.nilgirisbuildingpermissions.org

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...