ஈஷா விவகாரம்: பெற்றோர்கள் சந்திப்பதற்கு தடைகோரி மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.20-க்கு ஒத்தி வைப்பு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் தொடங்கி, 5000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகிறார்.

இவரது மகள்களான கீதா, லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்து இருந்தார்.

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்த கீதா மற்றும் லதா ஆகியோரை மூலை சலவை செய்த ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நான்தான் கடவுள் எனக்கூறியதோடு சகோதரிகளான இருவருக்கும் திருமணம் நடக்காமல் இருக்க மொட்டை அடித்துள்ளார்.

மேலும், காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து, தங்களது குழந்தைகளை பார்க்க ஈஷா மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இருவரையும் மீட்டுத்தருமாறும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடமும் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கியிருப்பதாக கோவை முதன்மை நீதிபதியின் நேரடி விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், பெற்றோர்கள் தங்களை சந்திக்க தடை விதிக்கக்கோரி கீதா மற்றும் லதா ஆகியோர் தொடுத்த வழக்கு விசாரணை திங்களன்று நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...