வால்பாறை பகுதியில் மூன்றாவது நாளாக குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்- பொது மக்கள் பீதி

வால்பாறை அடுத்த தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நாள்ளிரவில் நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாசுதேவன் மற்றும் ரோஸி என்ற தொழிலாளிகளின் வீட்டின் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது.

இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எழுந்த குடும்பத்தினர் பின் வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி கூச்சலிட்டுள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கம் வீட்டினர் தீ பந்தம் கொளுத்தியும், கூச்சலிட்டும் யானைகளை விரட்டியுள்ளனர்.



ஆனாலும், அந்த காட்டு யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று அங்கேயே முகாமிட்டுள்ளது.

மேலும் வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல், நல்லமுடி, ஜெகமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்டின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நல்லமுடி சுற்றுலாபகுதியான காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று மூன்றாவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதனிடையே, வால்பாறை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கும்கி யானைகளை வரவழைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...