கோவை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை- விவசாயி வேதனை

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடந்த சில நாட்களாக குடல் இறக்கம் நோயால் அவதியுற்று வருகிறார். 

இதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த கோவிந்தராஜ், தனக்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளகளிடம் அவர் கூறியதாவது:- 

எனது சொந்த ஊர் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமம். அங்கு இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர சுமார் 8 மணி நேரம் ஆகிறது. 

குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஆய்வகத்திற்கு சென்றேன். கடந்த இரு தினங்களாக தினமும் ஆய்வகத்திற்கு செல்கிறேன். நான் செல்லும் நேரத்தில் ஆய்வகத்தில் ஆட்கள் இல்லை எனவும், நாளை வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.



விவசாய கூலியான என்னை தினமும் அலைக்கழிப்பதால் அன்றாட வாழ்வாதாரத்தை பறிகொடுப்பதோடு, உடல் நிலையும் மிகவும் மோசமாகி வருகிறது.

மருத்துவ அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...