மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலைய மேம்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறுகிய நடைமேடை மேம்பாலத்தில் பயணிகள் சென்று கொண்டிருக்கும் போது, மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. இதனால், அங்கிருந்து மக்கள் ஓட முயன்றனர்.

நடைமேடை மேம்பாலத்தில் கூட்டம் அதிகரித்திருந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூச்சு திணறி 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று உதவியில் ஈடுபட்டது. தீயணைப்பு குழுவும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நேரத்தில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...