சூலூர் அருகே மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தியும் மதுபிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டால் கூலி தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் மது வாங்கி குடிக்க நேரிடும் எனவும், அதேசமயம் டாஸ்மாக் கடையைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றி வேறு பகுதிக்கு சென்றால் விபத்துகள் நேரிடும் எனவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும், செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்கள், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தினர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...