இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு


கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு கூலிப்படையைச் சேர்ந்த மர்ம நபர்கள் ராக்கியப்பன் என்பவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், தந்தை ராக்கியப்பன் மற்றும் வினோதி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும், ராக்கியப்பனின் மனைவி சரோஜினி மற்றும் அவரது மகள் யசோதா ஆகிய இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, சரோஜினி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்கிற குமார் (19), பரமசிவம் என்கிற சிவம் (23) மற்றும் சையது அப்துல் காதர் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கோவை நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...