கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு கூலிப்படையைச் சேர்ந்த மர்ம நபர்கள் ராக்கியப்பன் என்பவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், தந்தை ராக்கியப்பன் மற்றும் வினோதி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
மேலும், ராக்கியப்பனின் மனைவி சரோஜினி மற்றும் அவரது மகள் யசோதா ஆகிய இருவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து, சரோஜினி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்கிற குமார் (19), பரமசிவம் என்கிற சிவம் (23) மற்றும் சையது அப்துல் காதர் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கோவை நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.