சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் - சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி அறிக்கை

சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்.

இவ்விழா குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும். விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்" என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,  கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அமைச்சர் அவர்களே, சிவாஜி கணேசனுக்கு (எங்கள் தந்தைக்கு) மணி மண்டபம் அமைப்பது என்பது முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார்.

தந்தையின் மணி மண்டபத்தை அரசு திறந்துவைப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், அந்த திறப்புவிழாவில் முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.

தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது தனது தந்தையை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எனவே, திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்,அதிகாரிகள் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் குடும்பத்தினரும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் உங்கள் தரப்பிலிருந்து நல்லதொரு பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு சிவாஜி குடும்பத்தினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...