கோவை மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் - அமைச்சர் வேலுமணி


கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதும் குறித்தும், கோவை மாநகரத்திற்க்கு குடிநீரைக் எப்படி சீராக வழங்குவது பற்றியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நகராட்சத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் அரசு, மக்களுக்கான எல்லா திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது. 

மழை வந்து அணைகள் நிரம்பி வரும் வேளையில், மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியான சூழலில் பொதுமக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பாக சிறுவானி பகுதியில் உள்ள மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சீராக வழங்கப்படும். இன்றிலிருந்து கோவை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...