கண்ணாடி கருவிகள் தயாரிப்பு இலவச பயிற்சி - ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையை சேர்ந்த அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், அறிவியல் கண்ணாடி கருவிகள் தயாரிப்பதில் 2 மாதம் மற்றும்  11 மாதம் திறன் மேம்பாடு பயிற்சி படிப்புகளை துவங்க உள்ளது. இப்பயிற்சி நிலையம் அவினாசி சாலை சிட்ரா அருகில் மண்டல சோதனை ஆய்வுக் கூட வளாகத்தில் உள்ளது. 

11 மாத பயிற்சியில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 01.09.2017 அன்று முதல் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 3 ஆண்டுகள் தளர்த்தப்படும். 11 மாத பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு மாத குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 மாத பயிற்சிக்கு வயது உச்ச வரம்பு மற்றும் உதவித் தொகை கிடையாது. தொழிற்சாலைகள் மூலம் பரிந்துரைக்கப்படும் பணியாட்களும் 2 மாத பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி பெறுவோருக்கு விடுதி வசதிகள் கிடையாது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், விமான நிலையம் அஞ்சல், கோயம்புத்தூர் -641014 என்ற பெயரில் 01.09.2017-க்குப்பின் தேதியிட்ட ரூ.10-க்கு குறுக்கு கோடிட்ட அஞ்சல் ஆணையுடன் ரூ.5-க்கு அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட 10 x 23 செ.மீ. உறையுடன் இணைத்து அனுப்பி விண்ணப்ப படிவத்தினை உரிய இணைப்புகளுடன் மேற்கண்ட முகவரிக்கு 27.09.2017 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற பின்வரும் அலைபேசிகளில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 9698449372, 9789902171, 9444166766, 9842559335

ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து படித்து பயன் பெற முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...