மாற்றுத்திறனாளிக்கான சலுகை வழங்க புறக்கணிப்பதால் தற்கொலை செய்யப்போவதாக ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 18 வருடங்களாக அரசிடம் சலுகை கேட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து மாரியம்மாள் கூறியதாவது:-

மாற்றுத் திறனாளியான நான் பெட்டி கடை வைக்க கடன் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். பல முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை.

மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் என்னால் தொடர்ந்து வாடகைப் பணம் தரமுடியாத நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்குமாறும் விண்ணப்பம் செய்தேன். அதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

கடந்த 18 வருடங்களாக பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும் தனக்கு எந்த ஒரு உதவியும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் தராமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...