மாற்றுத்திறனாளிக்கான சலுகை வழங்க புறக்கணிப்பதால் தற்கொலை செய்யப்போவதாக ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 18 வருடங்களாக அரசிடம் சலுகை கேட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து மாரியம்மாள் கூறியதாவது:-

மாற்றுத் திறனாளியான நான் பெட்டி கடை வைக்க கடன் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். பல முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை.

மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் என்னால் தொடர்ந்து வாடகைப் பணம் தரமுடியாத நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்குமாறும் விண்ணப்பம் செய்தேன். அதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

கடந்த 18 வருடங்களாக பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும் தனக்கு எந்த ஒரு உதவியும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் தராமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...