தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை 7.30 மணியளவில் உக்கடம் லாரிப்பேட்டை அருகிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மியான்மரில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுவதை கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக படுக்கொலை செய்யப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் வருகின்ற (15-09-2017) வெள்ளிக்கிழமை ஆத்துபாலத்தில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சஹாப்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மியான்மரிலுள்ள ராகின் மஹானத்தில் ரோஹிங்கியா இன முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுகிறார்கள். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சுகி என்ற பெண்ணின் தலைமையில் நடைபெறும் அரசில் இன அழிப்பு படுகொலைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், அகதிகளாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சம் அடைய வந்தவர்களை மத்திய அரசு மியான்மருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. 

இதனை கண்டித்தும், அதேபோல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டும் வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீட் தேர்வை நிறுத்த கோரி போராடி வருகின்றனர். இவர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத்தின் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆத்துபாலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...