பதவி மற்றும் பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே தமிழக அரசு குறியாக உள்ளது - சு.ப.உதயகுமார் குற்றம்சாட்டு

கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கத்தில் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  கூடங்குளம் அணு உலையில் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் மக்களுக்கு வீடுகள் கட்டுவதில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது.  இந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை முறைப்படி நடத்த வேண்டும். அணு உலையை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதால் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து, அவர் பேசியதாவது :-  நீட் தேர்வு என்பது குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  இத்தேர்விற்கு எதிராக சென்னையில் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு வரவேற்கத்தக்கது.  நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் பதவி நாற்காலிகளையும், சேர்த்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இவ்வாறு உதயகுமார் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...