சிறந்து விளங்கும் தனியார் வங்கிக்கான விருதை பெற்றது லட்சுமி விலாஷ் வங்கி

விவசாயக் கடன், சிறு,குறு தொழில்களுக்கான கடன்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று, சிறந்து விளங்கிய தனியார் வங்கிளுக்கான விருது (Dun & Bradstreet - Banking Awards 2017)  கோவையில் வழங்கப்பட்டது. 

இந்த விருதை, லட்சுமி விலாஷ் வங்கி தட்டிச் சென்றது. அதன் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் விருதை பெற்றுக் கொண்டார்.  சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன் வழங்குவதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதால், லட்சுமி விலாஷ் வங்கி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

அதாவது, ரூ.5,700 கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன்களை வழங்கியுள்ளது. 2020 -ம் ஆண்டுக்குள் இந்தக் கடன் தொகையின் அளவை ரூ.10,000 கோடியாக அதிகரிப்பதே இலக்கு என லட்சுமி விலாஷ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

அண்மையில், முதல் முறையாக லட்சுமி விலாஷ் வங்கியின், வணிக கிளை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருது வாங்கியது தொடர்பாக லட்சுமி விலாஷ் வங்கியின் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் பேசுகையில், சிறந்த வங்கிக்கான விருதை பெற்றதன் மூலமாக மதிப்புமிக்க அங்கீகாரத்தை லட்சுமி விலாஷ் வங்கி பெற்றது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை அதிகரிப்பது தொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...