மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவை தற்கொலை தூண்டிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மனம் உடைந்து  தற்போது தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவை இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக இன்று மாலை நடைபெற்றது. 



இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாநில செயலாளர் அஷ்ரப் அலி கூறுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் இன்னும் போராடி வரும் இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவக் கனவு கொண்டிருக்கும் வேளையில் இன்று அவர்களின் கனவை மத்திய, மாநில அரசு தகர்த்துள்ளது. இதன் மூலமாக மாணவர் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது இந்த அரசாங்கம். இதற்கு காரணமான அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். இதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு முடியப் போவதில்லை நீட் தேர்வு குழிதோண்டி புதைக்கும் வரை மாணவர்களின் புரட்சி ஓங்கும் என்றார்.



கோவையில் கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...